செய்திகள் :

மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேநீர் வரை! ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டவை!

post image

ஒரு அரைமுழம் மல்லிகைப் பூவை என்னுடைய கைப்பையில் எடுத்துச் சென்றதற்காக, ஆஸ்திரேலியாவில், ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தியதாக நடிகை நவ்யா நாயர் தெரிவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட, மலையாளிகள் அமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று, இந்தியாவிலிருந்து மெல்போர்ன் விமானம் நிலையம் சென்ற நவ்யா நாயர், அவருடைய கைப்பையில் மல்லிகைப் பூவை வைத்திருந்தக் குற்றத்துக்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அவரே தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நிலையில், ஆஸ்திரேலியாவின், பயிர்ப் பாதுகாப்புக் கொள்கை, மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுவதாகவும், அவர்களது பயிர்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்று கருதும் எந்தவொரு பொருளையும் அந்நாட்டுக்குள் கொண்டு செல்வது குற்றம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பொருள்களை ஆஸ்திரேலியாவுக்குள் வெளிநாட்டினர் கொண்டு செல்லக் கூடாது.

அவற்றின் பட்டியலில் இடம்பெற்றுள்ள, ஆனால், மக்கள் தெரியாமல் கொண்டு செல்ல வாய்ப்புள்ள பொருள்களை மட்டும் தெரிந்துகொள்வது அவசியம்.

அந்த வகையில், காய்கறிகள், பழங்கள்,

மூலிகைகள், இலைகள், மிளகாய், பச்சை கொட்டைகள், விதைகள்

காய்ந்த அல்லது மலர்ந்த மலர்கள்

பால் பொருள்கள்

பர்ஃபி, ரச மலாய், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமன், மைசூர் பாக்கு, சோன் பப்படி போன்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்புகளையும் கொண்டு செல்லக் கூடாது.

உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!

வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு, உணவருந்த சென்ற அமெரிக்க அதிபரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நவீன கால ஹிட்லர் என கோஷமெழுப்பியதால் சங்கடம் ஏற்பட்டது. மேலும் பார்க்க

நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து அதிபர், பிரதமர் ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி அரசின் ஊழல... மேலும் பார்க்க

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் நாடு முழுவதும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதிக்கான முயற்சியை அந்நாட்டு ராணுவம் கையிலெடுத்துள்ளது.நேபாளத்தில் சமூக வலைதள செயலிகளுக்கு வி... மேலும் பார்க்க

போலந்து நாட்டுக்குள் ரஷிய ட்ரோன்கள்! பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பை உக்ரைன் வலியுறுத்தல்!

போலந்து நாட்டுக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் ஊடுருவியதால், ரஷியாவின் மீது நடவடிக்கை நேட்டோ அமைப்புக்கு போலந்தும் உக்ரைனும் வலியுறுத்தியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டுவரும் போரை ... மேலும் பார்க்க

பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா். முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட... மேலும் பார்க்க