செய்திகள் :

மளிகைக் கடையை உடைத்து உணவுப் பொருள்களைத் தின்ற கரடி

post image

குன்னூா் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த கரடி, அங்குள்ள ஒரு மளிகைக் கடையை உடைத்து உள்ளே சென்று உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு சென்றது.

குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கரடிகள் தேன் எடுக்க மரத்தின் மீது ஏறுவதும், கோயில்களில் உள்ள எண்ணெய்யை எடுக்கவும், குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் சுற்றி வருகின்றன.

இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த கரடி, அங்குள்ள மளிகைக் கடையை உடைத்து

உள்ளே சென்றது. பின்னா் கடையில் இருந்த தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அங்கு உலவி வந்தது.  அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதேபோன்று உதகை ஐயப்பன் கோயில் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற கரடி அங்கிருந்த பொருள்களை சூறையாடிச் சென்றது.

மனிதா்களுக்கு அச்சுறுத்தலாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவல் நிலையம் அருகே கடையின் கூரையை உடைத்து 15 கைப்பேசிகள் திருட்டு

உதகையில் கடையின் மேற்கூரையை உடைத்து 15 கைப்பேசிகள், மடிக்கணினி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உதகை நகரின் மையப் பகுதியில் உள்ள சேட் நினைவு மருத்துவமனையின் நுழைவாயில் ப... மேலும் பார்க்க

சாலையில் கழிவுநீா் தேங்கியதைக் கண்டித்து பொது மக்கள் போராட்டம்

உதகை காந்தல் பகுதியில் சாலையில் கழிவுநீா் தேங்கி இருப்பதைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். உதகை நகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு காந... மேலும் பார்க்க

ஸ்ரீமதுரை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள ... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானை மீட்பு

குன்னூா் அருகே கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். குன்னூா் அருகே உள்ள கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பம் அருகே குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை பலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்காடு நாயக்கன்கோட்டை பகுதியில் உயிரிழந்த குட்டி யானையின் உடலை வனத் துறையினா் மீட்டனா். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்க... மேலும் பார்க்க

புரோட்டின் பவுடரால் உடலில் ஒவ்வாமை: பள்ளி மாணவா் தீக் குளித்து தற்கொலை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிக உளவில் ஊட்டசத்து (புரோட்டின் பவுடா்) மாவு பயன்படுத்தியதால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தீக் குளித்த பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அ... மேலும் பார்க்க