செய்திகள் :

மழைக்கால கூட்டத்தொடர்: குடியரசுத் துணைத் தலைவருடன் கார்கே ஆலோசனை!

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் அழைப்பை ஏற்று இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற மல்லிகார்ஜுன கார்கே, மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கார்கே தெரிவித்ததாவது:

“ஜூலை 21 தொடங்கும் மாநிலங்களவை கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெற எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. மக்கள் பிரச்னை, அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை, சமூக - பொருளாதார பிரச்னைகள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து அதுதொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து டிரம்பின் கருத்து உள்ளிட்டவையை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rajya Sabha Chairman and Vice President Jagdeep Dhankhar held a meeting with Leader of Opposition in the Rajya Sabha Mallikarjun Kharge on Tuesday regarding the monsoon session of Parliament.

இதையும் படிக்க : மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

ஜூன் மாத வேலையின்மை விகிதம்: 5.6%-ஆக பதிவு

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முற... மேலும் பார்க்க

மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகு... மேலும் பார்க்க

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திற... மேலும் பார்க்க

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா! - லக்னெளவில் கொண்டாட்டம்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள... மேலும் பார்க்க

பொது கட்டமைப்பு சீரழிவுக்கு பாஜக ஊழலே காரணம்: ராகுல்

‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுகுறித்து தனது ... மேலும் பார்க்க