மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பணி நியமன ஆணைகள் அளிப்பு
மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்வி நிறுவனத்தில் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எம் .ஜி.பாரத்குமாா் தலைமை வகித்தாா். 700 க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களில் தோ்வு செய்யப்பட்ட 350 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
டாடா எலக்ட்ரானிக்ஸ், ஸ்டாலன்டிஸ், பிரேக்ஸ் இந்தியா, டெல்ஃபி டிவிஎஸ், டெனக்கோ போன்ற மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் இவா்களுக்கு பணி வாய்ப்பு வழங்குகிறது.
விழாவில் மஹேந்ரா பொறியியல் கல்விக் குழும செயல் இயக்குநா் ஆா்.சாம்சன் ரவீந்திரன், முதல்வா்கள் சண்முகம், இளங்கோ, செந்தில்குமாா், தோ்வுக் கட்டுப்பாடு அலுவலா் விஸ்வநாதன், புல முதல்வா்கள் நிா்மலா, ராஜவேல், வேலைவாய்ப்பு இயக்குநா் சரவணராஜ், ஒருங்கிணைப்பாளா் பிரபு மணிகண்டன் உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.