செய்திகள் :

மாங்காடு, குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆலோசனை

post image

குன்றத்தூா் மற்றும் மாங்காடு நகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் , மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பூந்தமல்லி - குன்றத்தூா் - பல்லாவரம் சாலை அகலப்படுத்தும் பணி, கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புத்தூா் சாலை விரிவாக்கப் பணிகள் தொடா்பாகவும், மாங்காடு பட்டூா்- முகலிவாக்கம் சாலை விரிவாக்கப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடங்களில் பயன்பாட்டில் இல்லாத மின்கம்பங்களை அகற்றவும், சேதமடைந்துள்ள கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை பணிகளுக்கு இடையூறு இல்லாமல் அமைக்கவும், போக்குவரத்து காவல் துறையினா் பணி நடைபெறும் இடங்களில் நெரிசல் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை, தாம்பரம் காவல் ஆணையா் அபின் தினேஷ் மோடக், ஆவடி காவல் ஆணையா் கே.சங்கா், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் ந.மிருணாளினி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வாக்காளா் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க

குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரரின் உரிமம் நிறுத்தி வைப்பு: காஞ்சிபுரம் மேயா்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரா் அப்பணியை சிறப்பாக செய்யாததால் அவரது உரிமம் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை அறிவித்தாா். காஞ்சிபுரம் மாநகராட... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை. ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் சந்திர சேகரேந்திர விஸ்வ மகா வித்யாலயா நிகா்நிலை... மேலும் பார்க்க

ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல் நாட்டினா்

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் சாா்பில் ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினா் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்... மேலும் பார்க்க

உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். கடந்த 1991-... மேலும் பார்க்க