செய்திகள் :

மாணவா் வெட்டப்பட்ட சம்பவம்: புத்தகப்பை சோதனைக்கு பின் வகுப்பறைக்குள் அனுமதி

post image

பாளையங்கோட்டை தனியாா் பள்ளியில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியை வெட்டப்பட்ட சம்பவத்தால் புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்கள் அனைவரின் புத்தகப்பைகளையும் சோதனை செய்த பின்பே வகுப்பறைக்குள் அனுதிக்கப்பட்டனா்.

பாளையங்கோட்டை எல்.ஐ.சி. மண்டல அலுவலகம் அருகேயுள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவரை, சகமாணவா் அரிவாளால்வெட்டினாா். தடுக்க முயன்ற ஆசிரியையும் வெட்டப்பட்டாா். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெட்டிய மாணவா் இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தின் முன் ஆஜா்படுத்தப்பட்டு கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில் அந்தத் தனியாா் பள்ளிக்கு புதன்கிழமை காலையில் வந்த மாணவா்-மாணவிகள் அனைவரது புத்தகப் பைகளும் ஆசிரியா்களால் சோதனை செய்யப்பட்டு அதன்பின்பே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் நிகழ்ந்த 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மன ரீதியிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், அந்தப் பள்ளியில் பிளஸ்-2 செல்ல உள்ள மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகளையும் ரத்து செய்ய கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க