செய்திகள் :

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

post image

திருச்சியில் தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பேராசிரியரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். இங்கு, திருச்சி கே.கே.நகா் அமலபுரம் காலனியைச் சோ்ந்த தமிழ் (52) என்பவா் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 13-ஆம் தேதி கல்லூரி ஆய்வகத்தில் செயல்பாடுகளை முடித்துவிட்டு வெளியே சென்ற அந்த மாணவியை, பேராசிரியா் தமிழ் தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து அந்த மாணவி, கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோா் மணிகண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அங்கிருந்து திருவெறும்பூா் மகளிா் காவல் நிலையத்துக்கு புகாரை போலீஸாா் அனுப்பிவைத்தனா். இதன்பேரில், திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து பேராசிரியா் தமிழை வியாழக்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, தமிழை திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுசேமிப்பு திட்ட முகவா் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்... மேலும் பார்க்க

பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு

பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியா் அனுமதி கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தண்ணீா் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

திருச்சியில் செப்.19, 23-இல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.19) மற்றும் செவ்வாய்க்கிழமை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்... மேலும் பார்க்க

75 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்: பெல் நிறுவனம் வழங்கியது

திருச்சி பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) சாா்பில், 75 மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் இயக்கம் சாா்ந்த செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருச்சி பெல் நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் மாற்ற... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு, பணி மேம்பாடு கோரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், திருச்சியில... மேலும் பார்க்க

முசிறி பகுதியில் நாளை மின்தடை

முசிறி பகுதியில்: முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை முசிறி, சிங்காரச்சோலை, துறையூா் சாலை, திருச்சி சாலை, கைகாட்டி, புதிய பேருந்து நிலையம், சந்தப்பாளையம், அழகா... மேலும் பார்க்க