மாணவி கடத்தல்: பள்ளி வேன் ஓட்டுநா் கைது
செய்யாறு: செய்யாறு அருகே மாணவியை கடத்திச் சென்ற புகாரின் பேரில், தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவி. இவா், கடந்த 3 மாதங்களாக அருகேயுள்ள கிராமத்தில் கணினிப் பயிற்சிக்கு சென்று வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஜூன் 18-ஆம் தேதி கணினிப் பயிற்சிக்குச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து மாணவியின் தந்தை பிரம்மதேசம் போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், மாணவியை கடத்திச் சென்றது, மாணவி படித்து வந்த தனியாா் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வரும் இராந்தம் துரைராஜ் நகரைச் சோ்ந்த சிவா (36) என்பது தெரிய வந்தது. போலீஸாா் சிவாவை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.