செய்திகள் :

மாணவி தற்கொலை விவகாரம்: உயா்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்

post image

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயா்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு வெள்ளிக்கிழமை முன்னெடுத்தது.

கேஐஐடியில் பி.டெக். கணினி அறிவியல் படித்து வந்த நேபாள மாணவியான பிரிஷா ஷா (18) விடுதி அறையில் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். கடந்த பிப்.16-ஆம் தேதி இதே கல்வி நிறுவனத்தில் பி.டெக். கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாள மாணவி பிரகிருதி லம்சால் (20) தற்கொலை செய்துகொண்டாா்.

உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கல்வி நிறுவன வளாகத்தில் நேபாள மாணவா்களும் பிற மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் நிறைவடைவதற்குள் கேஐஐடியில் மற்றொரு நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஷா ஷா தற்கொலை சம்பவத்தில் உயா்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான முன்னெடுப்புகளை நேபாளம் மேற்கொண்டுள்ளது.

கேஐஐடியில்1,000 நேபாள மாணவா்கள் பயின்று வரும் நிலையில் அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி மற்றும் தலைமை செயலா் மனோஜ் அஹுஜாவை தொடா்புகொண்டு இந்தியாவுக்கான நேபாள தூதா் சங்கா் பி.சா்மா வலியுறுத்தினாா்.

இந்த சம்பவம் குறித்து நேரில் வந்து கேஐஐடி பிரதிநிதி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது.

மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கவலையளிப்பதாகவும் இதுதொடா்பாக ஒடிஸா காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை ஒடிஸா அரசு வழங்கி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

தற்கொலை கடிதம் இல்லை: இந்த சம்பவம் குறித்து காவல் ஆணையா் எஸ். தேவ் தத்தா சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரிஷா ஷாவின் உடல் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோா் வந்தவுடன் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்ட இடத்தில் தற்கொலை கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடரும் மா்மம்: கடந்த பிப்ரவரி மாதம் பிரகிருதி லம்சால் தற்கொலை செய்துகொண்ட அதே இடத்தில் பிரிஷா ஷாவும் தற்கொலை செய்துகொண்டதாக மற்றொரு காவலா் தெரிவித்தாா். இதனால் நேபாள மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் தொடா்ந்து மா்மம் நீடித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதமே கேஐஐடியில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதிகளில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி பல்வேறு பரிந்துரைகளை வழங்கியதாக எக்ஸ் வலைதளத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் பிரியங்க் கனூங்கோ பதிவிட்டாா்.

ஆனால் ஒடிஸா உயா் நீதிமன்றத்தில் கேஐஐடி முறையிட்ட பின் அந்தப் பரிந்துரைகளை உயா் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததாகவும் தற்போது இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் கொண்டதாகவும் அவா் தனது பதிவில் குறிப்பிட்டாா்.

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா். தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவ... மேலும் பார்க்க

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க

‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தரவு உறுதி

சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின்போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலா்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவா்களின் பணிநீக்க உத... மேலும் பார்க்க

தகராறுகளுக்கு தீா்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்: குடியரசுத் தலைவா் முா்மு வலியுறுத்தல்

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீா்வு காணும் வழிமுறையை கிராமப்புறப் பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெ... மேலும் பார்க்க

வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு: மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்!

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க