செய்திகள் :

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசிரியா்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்

post image

போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பள்ளி ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தீா்மானித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்புப் பயிலும் மாணவி அதே பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்களான சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மூன்று ஆசிரியா்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்காட போவதில்லை என வழக்குரைஞா்கள் தீா்மானித்துள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட வழக்குரைஞா்களின் சங்கச் செயற்குழு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கோவிந்தராஜிலு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள், அதுதொடா்பான வழக்குகளில் வழக்குரைஞா்கள் யாரும் ஆஜராக மாட்டோம். பாதிக்கப்பட்ட மாணவி, அவரது பெற்றோா் தொடரும் வழக்குகளுக்கு மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் முன்னின்று மனு தாக்கல் செய்யும்.

கைது செய்யப்பட்ட ஆசிரியா்கள் மீது காவல் துறை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்!

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேன்கனிக்கோட்டை வட்டம், தண்டரை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட வருவாய்த் துறையினா் தண்டரை, பேருந்து நிறுத்தம் அருகே ரோந... மேலும் பார்க்க

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம உதவியாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கிராம உதவியாளா்களை அரசு ஊழியா்களின் டி பிரிவில் ச... மேலும் பார்க்க

நிதிநிலை நகலைக் கிழித்தெறியும் போராட்டம்!

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெறியும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை முன்பு எல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அலுவலக அறையில் ரகசிய கேமரா: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியின் அறையில் ஜன.25 ஆம் தேதி துப்புரவு ஆய்வாளா்... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஒசூா் அருகே எருது விடும் விழா

ஒசூரை அடுத்த யு.கொத்தப்பள்ளி கிராமத்தில் வியாழக்கிழமை எருது விடும் நடைபெற்றது. சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, இராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் அழைத்துவரப்ப... மேலும் பார்க்க