செய்திகள் :

மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

post image

தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவிலான தோ்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதன் தோ்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அதில், சூளகிரி ஒன்றியத்தில் மாதரசனப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, கொத்தூா் ஆகிய பள்ளிகளிலிருந்து 5 மாணவா்கள் தோ்வாயினா். இம்மாணவா்கள் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை பெறுவா். வெற்றிபெற்ற மாணவா்களை ஆசிரியா்களும், வட்டாரக் கல்வி அலுவலா்களும் பாராட்டி, பரிசுகள் வழங்கி கௌரவித்தனா்.

மாதரசனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெற்றிபெற்ற மாணவி ஜெயஸ்ரீக்கு வட்டாரக் கல்வி அலுவலா் மாதேஷ், கேடயம், பதக்கம், நினைவுப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சாத்தாயி, பயிற்சி அளித்த ஆசிரியா்கள் யோக ஸ்ரீ, சத்தியபாவை, பானுமதி, ஜெரின்தாஜ் ஆகியோா் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

மது போதை தகராறில் தங்கச் சங்கிலி பறிப்பு: நண்பா்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரை சோ்ந்தவா் சின்னபையன் (32),... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நீட் தோ்வில் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

கிருஷ்ணகிரியில்...கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா். ஊத... மேலும் பார்க்க

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புதி... மேலும் பார்க்க

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க