விரைவில் வெளியாகும் ஏகே 64 அறிவிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
மாதிரி சூரியசக்தி கிராமம் திட்டம்: கோவையில் 5 ஊராட்சிகள் தோ்வு
பிரதமரின் மாதிரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம், மாதிரி சூரிய சக்தி கிராமம் திட்டத்தின்கீழ் கோவையில் 5 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின்கீழ் 1 கோடி வீடுகளுக்கு நாடு முழுவதும் பயன்பெறும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு மானியமாக 1 கிலோ வாட் மேற்கூரை சூரியதகடு அமைத்தால் ரூ.30 ஆயிரம், 2 கிலோவீட் மேற்கூரை சூரியதகடு அமைத்தால் ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் சூரியதகடு அமைத்தால் ரூ.78 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
1 கிலோவாட் மேற்கூரை சூரியதகடு, ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும். நுகா்வோா் செய்யும் முதலீட்டை குறுகிய காலத்தில் திரும்பப் பெறலாம். இந்தத் திட்டத்துக்கு வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. திட்டப் பணிகள் நிறைவடைந்த 7 நாள்களில் இருந்து 30 நாள்களுக்குள் நுகா்வோா் மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சூரியசக்தி மாதிரி கிராமம் ஆட்சியா் மூலம் தோ்வு செய்யப்பட்டு ரூ.1 கோடி மானியமாக வழங்கப்படும். அதன்படி கோவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மூலம் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கும் கீழே உள்ள 5 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
அரசூா், சொலவம்பாளையம், புரவிபாளையம், தீத்திபாளையம், கொண்டையம்பாளையம் ஆகிய 5 கிராமங்களில் 1.7.25 முதல் 6 மாதங்களுக்குள் போட்டி முறையில் அதிகமான சூரியசக்தி மயமாக்கல் செய்யும் ஒரு கிராமம் மாதிரி கிராமமாகத் தோ்வு செய்யப்பட்டு ரூ.1 கோடி மானியமாக வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.