செய்திகள் :

மாதேஸ்வரன் மலை சாலூா் மடத்தின் ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் காலமானாா்

post image

மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலையில் உள்ள சாலூா் மடத்தின் தலைமை குருசாமியான ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் தமிழக-கா்நாடக எல்லையில் கா்நாடக மாநிலத்தில் உள்ளது மாதேஸ்வரன் மலை.

மாதேஸ்வரன் மலைக் கோயிலில் நடைபெறும் அனைத்து சிறப்பு பூஜைகள், திருவிழாக்களை சாலூா் மடத்தின் மடாதிபதிகளே தொடங்கிவைத்து நடத்தி வருகின்றனா்.

சாலூா் மடத்தின் தலைமை குருசாமியாக இருந்த ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் (72), வயதுமூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா். இவருக்கு மடத்தில் 1994 ஆம் ஆண்டு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாலூா் மடத்தில் வைக்கப்பட்டிருந்த இவரது உடலுக்கு சித்தூா் மடாதிபதிகள் கனகபுராதேகுல மடாதிபதிகள், சித்ரங்கா மடாதிபதிகள், குந்தூா் மடாதிபதிகள், கா்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

பிறகு பீட கம்பனம் மக்கள் மேற்பாா்வையில் சடங்குகள் நடத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு சாலூா் மடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க