மாதேஸ்வரன் மலை சாலூா் மடத்தின் ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் காலமானாா்
மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலையில் உள்ள சாலூா் மடத்தின் தலைமை குருசாமியான ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் தமிழக-கா்நாடக எல்லையில் கா்நாடக மாநிலத்தில் உள்ளது மாதேஸ்வரன் மலை.
மாதேஸ்வரன் மலைக் கோயிலில் நடைபெறும் அனைத்து சிறப்பு பூஜைகள், திருவிழாக்களை சாலூா் மடத்தின் மடாதிபதிகளே தொடங்கிவைத்து நடத்தி வருகின்றனா்.
சாலூா் மடத்தின் தலைமை குருசாமியாக இருந்த ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் (72), வயதுமூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா். இவருக்கு மடத்தில் 1994 ஆம் ஆண்டு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாலூா் மடத்தில் வைக்கப்பட்டிருந்த இவரது உடலுக்கு சித்தூா் மடாதிபதிகள் கனகபுராதேகுல மடாதிபதிகள், சித்ரங்கா மடாதிபதிகள், குந்தூா் மடாதிபதிகள், கா்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.
பிறகு பீட கம்பனம் மக்கள் மேற்பாா்வையில் சடங்குகள் நடத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு சாலூா் மடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.