செய்திகள் :

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

post image

கூலி திரைப்படத்தின் கலை இயக்குநர் குறித்து லோகேஷ் கனகராஜ் பெருமிதமாகப் பதிவிட்டுள்ளார்.

கூலி படத்தில் வேலை பார்த்த ஒரு கலைஞர் குறித்து லோகேஷ் தினமும் பதிவிட்டு வருகிறார்.

இந்தப் படத்துக்கு கலை இயக்குநராக சதீஷ் குமார் பணியாற்றியுள்ளார். இவர் முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர், லியோ படங்களுக்கும் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

இந்நிலையில், கலை இயக்குநர் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:

என்னுடைய முதல் படத்திலிருந்து கூலி படம் வரை, உன்னுடைய இதயத்திலிருந்து வேலை செய்திருக்கிறாய். முடிவில்லா நேரங்களிலிருந்து எல்லா பிரேம்களிலும் நாம் வேலை பார்த்திருக்கிறோம் சதீஷ் அண்ணா.

உங்களது அற்பணிப்பு, உறங்கா இரவுகள், என் மீதும் என் படங்கள் மீதும் எப்போதும் உண்மையான அக்கறையுடன் இருக்கிறீர்கள். திரையில் நாம் உருவாக்கிய உலகத்திற்கான உந்துசக்தியாக நீங்கள் இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

கூலி திரைப்படம் வருகிற ஆக.14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.

Lokesh Kanagaraj has posted proudly about the art director of the movie Coolie.

மோனிகா பாடலுக்காக மோனிகா பெலூச்சி கூறியதென்ன? பூஜா ஹெக்டே பெருமிதம்!

கூலி படத்தில் பிரபலமான மோனிகா பாடல் நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு பிடித்துள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் பான் இந்திய நடி... மேலும் பார்க்க

கூலி பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஒரு நாளுக்கு 5 காட்சிகளைத் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

கூலி திரைப்படம் நாளைமறுநாள் (ஆக. 14) வெளியாகவுள்ள நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.கூலி திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகள் முடிந்த... மேலும் பார்க்க

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்

ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாரா... மேலும் பார்க்க

மகாபாரதப் பணிகளைத் துவங்கும் ஆமிர் கான்!

நடிகர் ஆமிர் கான் மகாபாரதத்தை திரைப்படமாக்கும் திட்டத்தைத் துவங்கவுள்ளார். பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான ஆமிர் கான் கடந்த சில ஆண்டுகளாகவே மார்க்கெட் இழந்த நடிகராக இருக்கிறார். காரணம், லால் சிங் சத்தா... மேலும் பார்க்க