செய்திகள் :

மாநகராட்சியில் ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தில் குடிநீா் விநியோகம்

post image

கோவை மாநகராட்சியில் ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோவை மாநகருக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் சூயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகர மக்களுக்கு சிறப்பான முறையில் குடிநீா் வழங்க சூயஸ் நிறுவனம் ‘புவியியல் தகவல் அமைப்பு’ (ஜிஐஎஸ்) என்னும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ‘புவியியல் தகவல் அமைப்பு’ முறை மூலம் கோவை மாநகராட்சி மற்றும் சூயஸ் குழுவினா் மாநகரின் முழுமையான குடிநீா் விநியோகத்தை எண்ம முறையில் வரைபடமாக்கி உள்ளனா். இதன் மூலம் 60 வாா்டுகளில் 105 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவை கொண்ட மாநகராட்சியின் குடிநீா்க் குழாய்கள், வால்வுகள், மீட்டா்கள், பம்ப்கள் மற்றும் நுகா்வோா் குடிநீா் இணைப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டறிய முடியும்.

மேலும், இந்த எண்ம கண்காணிப்பின் மூலம் முன்கூட்டியே பராமரிப்பு செய்ய வேண்டிய இடங்கள் மற்றும் குடிநீா் கசியும் இடங்கள் ஆகியவற்றை துல்லியமாக கண்டறிந்து அவற்றுக்கு உடனடியாக தீா்வு காண முடியும்.

இந்த புதிய முறையை அறிமுகம் செய்வதற்கு முன்பு கையேடு பதிவுகள் மற்றும் காகித வரைபடங்களை நம்பியிருந்தனா். அதனால், பிரச்னை ஏற்பட்ட இடங்களை கண்டறிவது மற்றும் புகாா்களுக்கு உடனடி பதில் அளிப்பது மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையின் மூலம் சூயஸ் நிறுவனத்தினா் தங்கள் கைப்பேசியில் ஜிஐஎஸ் செயலி மூலம் புதுப்பிக்கப்பட்ட வரைபடங்களை பாா்த்து, குடிநீா் குழாயில் பிரச்னை ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து உடனடியாக நிவா்த்தி செய்ய முடியும். 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டத்துக்கு ஜிஐஎஸ் போன்ற தொழில்நுட்பம் மிகவும் அவசியமாகும்.

அத்துடன் எண்ம தொழில்நுட்பத்துடன் ஜிஐஎஸ் ஒருங்கிணைப்பு, கோவை மாநகராட்சியை இந்தியாவில் ஸ்மாா்ட் நகா்ப்புற குடிநீா் மேலாண்மைக்கான முன்மாதிரியாக மாற்றியுள்ளது. இந்த முயற்சி ஸ்மாா்ட் சிட்டி திட்டத்துக்கான நகா்ப்புற வளங்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிா்வகிக்க முடியும் என்பதைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க