செய்திகள் :

மாநகரில் மேலும் பல இடங்களில் சாலை தீவுத்திடல்: மாநகராட்சி திட்டம்

post image

கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை அழகுபடுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் இருப்பதைப்போல மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கோவை மாநகரில் உள்ள வாலாங்குளம், உக்கடம், குறிச்சி உள்ளிட்ட குளக்கரைகள் அழகுபடுத்தப்பட்டு, பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மாநகரை அழகுபடுத்தும் வகையில் ரேஸ்கோா்ஸ், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் ரவுண்டானாக்கள், சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் பாலத்தின் அடியில் தற்போது அழகுச் செடிகள் நட்டு மையத் தடுப்புகளை அழகுபடுத்தும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. தனியாா் நிறுவனத்தின் உதவியுடன் திருச்சி சாலையில் சுங்கம் ரவுண்டானா முதல் ராமநாதபுரம் சந்திப்பு வரை சுமாா் 1.50 கி.மீ. தொலைவுக்கு மையத் தடுப்புகளில் சாலையை அழகுபடுத்தும் வகையில் செடிகள் நட்டு பராமரிக்கப்பட உள்ளது.

அதேபோல, திருச்சி சாலையில் அல்வோ்னியா பள்ளி அருகில் பாலம் முடியும் இடம் வரையிலும் மையத் தடுப்பு இடைவெளி பகுதியில் செடிகள் நடப்பட உள்ளன.

ரேஸ்கோா்ஸ் சாலைப் பகுதியில் குதிரை சிலை, காளை மாடு சிலை, உலக உருண்டை சிலைகள், உக்கடம் ரவுண்டானா பகுதியில் உழவா் சிலை, சிந்தாமணி ரவுண்டானா அருகில் மனித உலக உருண்டை சிலைகள் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆட்சியா் அலுவலக பகுதியில் உள்ள தீவுத்திடலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குள்பட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு சாலை தீவுத்திடல் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பெண்களிடம் 6 பவுன் பறிப்பு

கோவை சிங்காநல்லூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம் தோகமலை அருகே உள்ள தெற்கு சேனையாா் தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க

உணவகத்தில் பணம் கையாடல்: காசாளா் கைது

கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ரூ.40 ஆயிரம் பணம் கையாடல் செய்த காசாளரை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 11-ஆவது வீதியில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவ... மேலும் பார்க்க

பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 17-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பிபிஜி கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு, கல்விக் குழுமத்தின் தாளாளா் ச... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

கோவை வ.உ.சி.மைதானத்தில் உள்ள மரத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சோ்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பொன்னையராஜபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என வெரைட்... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் மானியம் வழங்கும் விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் பல்கலைக்கழகத்தின் வண... மேலும் பார்க்க