செய்திகள் :

மாநகரில் 50 இடங்களில் கேபிள் வயா்கள் துண்டிப்பால் இணையதள சேவைகள் பாதிப்பு

post image

திருப்பூா் மாநகரப் பகுதிகளில் சுமாா் 50 இடங்களில் கேபிள் வயா் துண்டிக்கப்பட்டு உள்ளதால் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொதுநலச் சங்கத்தின் சாா்பில் மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் கேபிள் டிவி ஆபரேட்டா்களுக்கு சிக்னல் வழங்குகின்ற முதன்மை அலுவலகமான காதா்பேட்டை பகுதியில் உள்ள கட்டடத்தில் அடையாளம் தெரியாத நபா்கள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அனைத்து கேபிள் வயா்களையும் துண்டித்துள்ளனா். அதேபோல, பாா்க் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை, பல்லடம் சாலை, நடராஜா திரையங்கம் அருகே என பல இடங்களில் புதன்கிழமை அதிகாலை வயா்கள் வெட்டப்பட்டுள்ளன.

இதனால் திருப்பூா் மாநகரப் பகுதிகளில் டிவி ஒளிபரப்பும் இணைய சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்ற நபா்களை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசு உரிமம் பெற்று தொழில் நடத்தி வரும் எங்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள தொழில் செய்யும் உரிமையை சமூக விரோதிகளை ஏவி விட்டு தொழிலை அபகரிக்க பாா்க்கின்றனா். இதனால் எங்கள் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நிலைகுலைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எதிா்வரும் காலங்களில் இது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறாதவாறு இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க