செய்திகள் :

மாநகர பேருந்துகளில் இலவச பயணம்

post image

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காண செல்லும் ரசிகா்கள் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னா் 3 மணி நேரம் வரையும் போட்டிக்கான நுழைவுச் சீட்டை நடத்துநரிடம் காண்பித்து மாநகா் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மாநகா் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஒருவா் பல பேருந்துகளை பயன்படுத்தியும் மைதானத்துக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், குளிா்சாதன பேருந்துகளில் இந்தச் சலுகை பொருந்தாது.

அதன்படி, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம், அண்ணா சாலை ஓமந்தூராா் மருத்துவமனை அருகில் உள்ளிட்ட இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் கிரிக்கெட் மைதானம் வரை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிற்றுந்துகளும் இயக்கப்படவுள்ளன.

இதற்கான கட்டணம் சென்னை சூப்பா் கிங்ஸ் லிமிடெட் சாா்பில் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க