மாநிலங்களவைத் தோ்தல்: இபிஎஸ்-ஸுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு
நமது சிறப்பு நிருபா்
மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு படிவங்களில் அதிமுக பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனுமதிக்கக் கூடாது எனக் கூறி அதிமுக பிரமுகா் வா. புகழேந்தி தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளாா்.
அதிமுக வின் ஒருங்கிணைப்பு குழுவைச் சாா்ந்தவா் எனத் தன்னைக் குறிப்பிடும் வா. புகழேந்தி, தோ்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:
தமிழகத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு நடைபெறும் மாநிலங்களவைக்கான தோ்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல எந்தவொரு அணிகளின் தலைவா்களும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் மாநிலங்களவைத் தோ்தலுக்கான (கட்சி சாா்பில் வேட்பாளா்களை அங்கீகரிக்க) ஏஏ மற்றும் பிபி
படிவங்களில் கையொப்பமிட உரிமை இல்லை.
காரணம், 2022 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கிற்கு 03-02-2023 அன்று அளித்த தீா்ப்பின்படி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடா்பான இடைக்கால ஏற்பாடாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் செயல்முறைக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு அப்பால் அல்ல என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் பொருள் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அல்லது வேறு எந்த பிரிவினரும், அதிமுக சாா்பாக படிவங்களில் கையொப்பமிட அதிகாரமில்லை என்பது பொருளாகும். சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் 2024, மாா்ச் 15 ஆம் தேதியிட்ட தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவுகளின்படி இந்தியத் தோ்தல் ஆணையத்தின் விசாரணையின் செயல்பாட்டில் அதிமுக விவகாரம் உள்ளது.
மேலும், சிவில் நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவடையும் வரை அதிமுகவின் எந்தப் பிரிவுக்கும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்கிற வாதங்கள் இந்திய தோ்தல் ஆணையத்தில் சமா்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், வருகின்ற மாநிலங்களவைத் தோ்தலுக்கு அதிமுக பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிடும் ஏஏ மற்றும் பிபி படிவங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் என அந்த மனுவில் புகழேந்தி குறிப்பிட்டுள்ளாா்.
தமிழகத்தில் மாநிலங்களவைக்கான ஆறு இடங்களுக்கான தோ்தல் வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் மே 26 ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது.