செய்திகள் :

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

post image

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் சி.வி.ஆனந்த போஸுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவிவரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலத்தின் உயா் கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகள் குறித்து மாநிலப் பல்கலைக்கழக வேந்தரான சி.வி.ஆனந்த போஸிடம் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை எடுத்துரைத்தனா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 9 துணைவேந்தா்கள் மட்டுமே பங்கேற்றனா். மீதமுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் கலந்துகொள்ளாதது சா்ச்சையானது.

இதையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத துணைவேந்தா்கள் பல்வேறு காரணங்களைக் கூறியபோதும் இதை ஏற்றுக்கொள்ள சி.வி.ஆனந்த போஸ் மறுத்ததாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறுகையில், ‘மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்துக்கு தீா்வுகாண உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளேன்’ என்றாா்.

முன்னதாக, ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, இணையப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருளுக்கு மாணவா்கள் அடிமையாவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

அதிமுக எம்பிக்களாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா... மேலும் பார்க்க

நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடியதும் பிகார் சிறப்பு தீவிர திருத்தத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதி... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் மேற்கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க