செய்திகள் :

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் தொடர் உயிரிழப்பு- நடவடிக்கை கோரி தொடர் உண்ணாவிரதம்

post image

அவிநாசி பகுதியில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, உடனடியாக அகற்றக் கோரி அவிநாசி பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து திங்கள்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக அமைப்பினர், வியாபாரிகள், அனைத்துக் கட்சியினர், நகர் மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கூறியதாவது-அவிநாசி பழைய-புதிய பேருந்து நிலைய கோவை பிரதான சாலை, குறிப்பாக அவிநாசி-சேவூர் சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் அவ்வப்போது, வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

ஆகவே உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து மனுக் கொடுத்து போராடி வருகிறோம். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் செய்வதால், தொடர்ந்துஉயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசுத் துறையினர் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்

இல்லாவிட்டால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனர். வளர்ந்து வரும் அவிநாசி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்காக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவிநாசியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிநாசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Various organizations in Avinashi joined forces to engage in a hunger strike on Monday morning.

பாக்கியலட்சுமி வெறும் தொடர் அல்ல; பாடம்: நடிகை நேகா நெகிழ்ச்சி

பாக்கியலட்சுமி வெறும் தொடர் மட்டுமல்ல; மறக்க முடியாத நினைவுகளுடன் கூடிய பாடம் என நடிகை நேகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பாக்கியலட்சுமி தொடருடன் பணியாற்றியுள்ளதாகவும், நடிப்பின்... மேலும் பார்க்க

சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்: ராஜேந்திர பாலாஜி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி கண்கலங்கி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர்

புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பி... மேலும் பார்க்க

திருச்சியில் பள்ளி முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு!

திருச்சியில் தனியார் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் பிரபல கேம்பியன் மேல்நிலைப்பள்ளியில் 1995 ஆம் ஆண்டு 90 மாணவர்கள் பயின்றனர், அவர்கள் அங... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர் அணையில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அட... மேலும் பார்க்க

ஆம்பூர் சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஆம்பூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜூலை.28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் ஞாயிற்... மேலும் பார்க்க