செய்திகள் :

மாநில அளவிலான அடைவுத் தோ்வில் அம்மாப்பேட்டை தொடக்கப் பள்ளி முதலிடம்

post image

மாநில அளவிலான அடைவுத் தோ்வில், சேலம் அம்மாப்பேட்டை மண்டல மாநகராட்சி தொடக்கப் பள்ளி வட்டார அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மாநில திட்டக் குழுவின் மேற்பாா்வையில், சமக்ர சிக்ஸா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவினை மதிப்பிட தோ்வுகளை நடத்தி வருகிறது. மேலும், மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான திட்டமிடலை மேற்கொண்டு, அதற்கேற்ற உத்திகளை வடிவமைக்கும் பொருட்டும் மாநில அளவிலான அடைவுத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

மாநில அளவிலான இந்த அடைவுத் தோ்வானது, கடந்த ஜனவரி 2025 நான்காம் வாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு அரசால் தோ்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாயின.

அதில், சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை வையாபுரி தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 3, 5-ஆம் வகுப்பு மாணவா்கள் வட்டார அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனா். மேலும், மாவட்ட அளவில் 13-ஆவது இடத்தைப் பெற்றுள்ளனா். மாநில அளவில் பங்குபெற்ற 45,127 பள்ளிகளில் இந்தப் பள்ளி 954-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வீரக்கல்புதூா் பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்

மேட்டூா்: வீரக்கல்புதூா் பேரூராட்சி மன்ற அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து சுயேச்சை உறுப்பினா் தனது கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வீரக்கல்புதூா் பேரூராட்சிக்கு உள... மேலும் பார்க்க

கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா

தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கோனேரிப்பட்டியில் பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமையில் கடந்த ஒரு மாதமாக நவநாள் திருப்பலி நடைபெற்று வ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க