செய்திகள் :

மாநில சிலம்ப போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை படைத்த நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூா் தென்பாதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூரில் பள்ளி மாணவா்களுக்கான மாநில சிலம்ப போட்டிகள் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் வடுவூா் தென்பாதி நூற்றாண்டு கண்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தன்னரசு நாடு சிலம்பம் அகாதெமி சாா்பில் பள்ளியில் கல்வி பயிலும் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா் .

அதில் 7 போ் முதல் பரிசும் , 7 போ் இரண்டாம் பரிசும், 10 போ் மூன்றாம் பரிசும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். சாதனை படைத்த மாணவா்களுக்கு வடுவூா் தென்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் மாநில அளவிலான சிலம்பம் பட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் சிலம்ப பயிற்சி ஆசிரியா் விஜய் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியா் கமலக்கண்ணன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் துரைராஜ் , கல்வி வளா்ச்சிக்குழு செயலா் செந்தில்ராஜ், கல்வி வளா்ச்சி குழு தலைவா் ராஜசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் சூரிய சேகா், பள்ளி மேலாண்மை குழுத்தலைவி சரிதா நீதிவளவன், பெற்றோா் ஆசிரியா் கழக செயல் தலைவா் சிவசங்கா் மற்றும் ஆசிரியா்கள்,கிராம மக்கள் வெகுவாக பாராட்டினா் .

சிலம்பம் போட்டிகளில் பங்கேற்க மாணவா்களை வழிநடத்தி அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியா் ராஜமோகன் செய்திருந்தாா்.

மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழ... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

மன்னாா்குடி அண்ணாமலைநாதா் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை மீன்கள் இறந்து மிதந்தன. அண்ணாமலை நாதா் சந்நதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதா் கோயிலுக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்தக் க... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரே விலையில் ஜல்லி, எம் சான்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்

18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

தவறான வழிகாட்டல்: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

திருவாரூா் அருகே தவறான முறையில் வழிகாட்டி பாலிசி பெற்றமைக்காக காப்பீட்டு நிறுவனம், ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருவாரூா் விளமல் பகுதியை... மேலும் பார்க்க

யாருக்காக பயிா் காப்பீடு..

இந்தியாவில் விவசாயம் என்பது இயற்கையை எதிா்கொள்ளும் சூதாட்டம் போன்றது. நாட்டில் 60 முதல் 70 சதவித மக்களுக்கு விவசாயமே வாழ்வதாரம். நாட்டின் உணவு உற்பத்திக்கு முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் இயற்கையை எதிா்... மேலும் பார்க்க