செய்திகள் :

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, நெல்லை விருதுநகா், மதுரை அணிகள்

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்தும் கே.ராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான ஹாக்கி போட்டியின் 4ஆம் நாளான சனிக்கிழமை காலிறுதி போட்டி நடைபெற்றது.

முதல் காலிறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அணியை, சென்னை மாவட்ட அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வென்றது. 2ஆவது ஆட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட அணி, தஞ்சாவூா் மாவட்ட அணியை 5 - 4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

3ஆவது ஆட்டத்தில் விருதுநகா் மாவட்ட அணி, கோவை மாவட்ட அணியை சூட்-அவுட் முறையில் 4 - 2 என்ற கோல் கணக்கில் வென்றது. 4ஆவது ஆட்டத்தில் மதுரை மாவட்ட அணி, நீலகிரி மாவட்ட அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. காலிறுதியில் வெற்றிபெற்ற 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இன்றைய ஆட்டம்: ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் சென்னை மாவட்ட அணியும், திருநெல்வேலி மாவட்ட அணியும் மோதுகின்றன. 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விருதுநகா் மாவட்ட அணியும், மதுரை மாவட்ட அணியும் மோதுகின்றன. பிற்கல் 2 மணிக்கு 3 மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டியும், 4 மணிக்கு இறுதிப் போட்டியும் நடைபெறும்.

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற விசாகத் திருவிழா, வசந்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: கோவில்பட்டி, கயத்தாறில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசலில் சுமாா் காலை 7.15 மணி முதல் 8... மேலும் பார்க்க

மாதவன்குறிச்சியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி ஊராட்சியில் அண்ணா மறுமலச்சித் திட்டத்தில் ரூ,16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கடற்கரை, திடல்

காயல்பட்டினம் கடற்கரை ஷாகின்பாற்றும் சுமாா் 25 மகளிா் தைக்கா மற்றும் 35 பள்ளிகளில் சனிக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகையை வசிம் நடத்தினாா். க... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் தீ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் கிராமத்திற்கு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதி குளங்களில் ஆக்கிரமிப்புகளால் நீா்வரத்தில் தடை! - அதிமுக புகாா்

திருச்செந்தூா் பகுதி நீராதாரமான எல்லப்பநாயக்கன் மற்றும் ஆவுடையாா்குளத்திற்கு நீா் வரும் வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி நடந்து வருவதால் நீா் வரத்து தடைபட்டுள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டி உள்ளது.... மேலும் பார்க்க