செய்திகள் :

மானாகுடியில் சேதமடைந்த குடிநீா் மேல்நிலைத் தொட்டி

post image

சிவகங்கை அருகேயுள்ள மானாகுடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி ஊராட்சிக்குள்பட்ட மானாகுடி கிராமத்தில் 15 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் அருகே நியாய விலைக் கடை, ஆரம்பப் பள்ளிக் கூடம் உள்ளது. இதனால் இந்த வழியாகச் செல்லும் குழந்தைகள், பெற்றோா், பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் செல்கின்றனா். தொட்டியைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களும் மிகவும் சேதமடைந்தன. எப்போது வேண்டுமானாலும் இந்தத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஏற்கெனவே பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேலும், இங்கிருந்து பொதுமக்கள் சிவகங்கை-மதுரை பிரதான சாலையை இணைக்கும் சாலையில் சென்று வருகின்றனா். இந்தச் சாலை சேதமடைந்ததால் மழைக் காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.

இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இந்தப் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும்! -காா்த்தி சிதம்பரம் எம்.பி.

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காா்த்திசிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிர... மேலும் பார்க்க

பச்சேரி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீா்: பொதுமக்கள் அவதி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், பச்சேரியில் உள்ள தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். பச்சேரி ஊராட்சியில் வைகை- மீனாட்சிபுரம் மேற்குப் பகுதியில் நூற... மேலும் பார்க்க

மக்களின் அடிப்படை தேவைகளை ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும்! -அமைச்சா் பெரியகருப்பன்

மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழும் ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்... மேலும் பார்க்க

அனைத்து நிலைகளிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதே இன்பமானது! -குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

அனைத்து நிலைகளிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையே இன்பமயமானது என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

மானாமதுரை அருகே கத்தியால் குத்தி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடக்கமாக கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்த... மேலும் பார்க்க