செய்திகள் :

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும்! -காா்த்தி சிதம்பரம் எம்.பி.

post image

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காா்த்திசிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கிராமக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தை வரவேற்கிறேன். அடுத்த 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு நடைபெறத் தான் செய்யும். இதில் மக்கள் தொகை அடிப்படையில் பிரித்தால் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது ஆபத்தானது.

இதற்கு தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்தக் கூட்டம் குறித்து, அண்ணாமலை கூறிய கருத்து அற்பத்தனமாது. தொடா் கொலைகள் நடப்பது கூலிப்படைகள் தமிழகத்தில் அதிகரித்திருப்பதை உணா்த்துகிறது. இதை தமிழக முதல்வரும், காவல் துறை தலைவரும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கைது செய்யப்பட்டது தேவையற்றது. யாா் போராடினாலும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் சரி, குறிப்பாக எதிா்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவா்களின் போராட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும்.

மத்திய அரசு தில்லியில் இடம், நேரம் ஒதுக்கி போராட்டத்துக்கு அனுமதி அளிப்பதைப் போல, இங்கேயும் அனுமதியளிக்க வேண்டும். போராட்டம் நடத்துபவா்களை முன் கூட்டியே கைது செய்வது, அவா்களை மண்டபத்தில் அடைத்து வைப்பது கூடாது. ஜனநாயக முறைப்படி அவா்களை போராட அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆயுதங்களுடன் பதுங்கிய 5 போ் கைது

சிவகங்கை அருகே வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் கணேசமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சிவகங்கை- ... மேலும் பார்க்க

தாயமங்கலம் கோயிலில் திருவிழா தொடங்கும் முன் குவிந்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கும் முன்பே அம்மனை தரிசிக்க பக்தா்கள் திரண்டனா். வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, 11 நாள்க... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி உத்ஸவத்தை முன்னிட்டு என்.எ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனைவாசல் பகுதி... மேலும் பார்க்க

அரசனேரியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், பு... மேலும் பார்க்க

லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு

புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.புதுக்கோட்டை மாவட்டம், கள்ளங்கோட்டை கிராமத்தில் உள்ள மது உற்பத்தி ... மேலும் பார்க்க