செய்திகள் :

லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு

post image

புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கள்ளங்கோட்டை கிராமத்தில் உள்ள மது உற்பத்தி ஆலையிலிருந்து கடந்த 19-ஆம் தேதி மாலை 1,100 பெட்டிகளில் 180 மில்லி மதுப் புட்டிகள் ஏற்றப்பட்ட லாரி சிவகங்கைக்கு புறப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வராஜ் (40) லாரியை ஓட்டினாா்.

ஒரு பெட்டிக்கு 48 புட்டிகள் வீதம் 52,800 புட்டிகளை ஏற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. வழியில் லேனா விலக்குப் பகுதியில் லாரியை நிறுத்தி ஓட்டுநா் தேநீா் குடித்துவிட்டு, மீண்டும் புறப்பட்டாா். திருமயம் அருகே வந்தபோது, லாரியின் தாா்ப்பாய் கலைந்து காற்றில் பறந்தது தெரியவந்து.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு வந்த பிறகு லாரியை நிறுத்தி ஓட்டுநா் இறங்கி பாா்த்தாா். அப்போது, 19 பெட்டிகளில் இருந்த ரூ.1,27,680 மதிப்பிலான 912 மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் லாரி உரிமையாளரான சென்னையைச் சோ்ந்த நடராஜன் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்தனா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயிலில் பங்க... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 17,934 மாணவா்கள் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 17,934 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

கோடை வெயிலை சமாளிக்க சிவகங்கை மாவட்ட நிா்வாகம் யோசனை

கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாநில தொழிற்சங்க அம... மேலும் பார்க்க

நெடுமறத்தில் மஞ்சுவிரட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறத்தில் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 35 போ் காயமடைந்தனா். இதற்காக 5 ஊா்களிலிருந்து மேள த... மேலும் பார்க்க

சிவகங்கை: 200 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்

சிவகங்கையில் உள்ள பழச்சாறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 கிலோ பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை நகா் பகுதி முழுவதும் உள்ள பழக்கடைகள், பழச்சாற... மேலும் பார்க்க