செய்திகள் :

தாயமங்கலம் கோயிலில் திருவிழா தொடங்கும் முன் குவிந்த பக்தா்கள்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கும் முன்பே அம்மனை தரிசிக்க பக்தா்கள் திரண்டனா்.

வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, 11 நாள்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே தாயமங்கலத்துக்கு திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் காா், வேன், லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்தினா், உறவினா்களுடன் வந்து குவிந்தனா். இவா்கள் ஆடு, கோழிகளைப் பலியிட்டும், பொங்கல் வைத்தும், தீச்சட்டி எடுத்து, முடி காணிக்கை செலுத்தியும், மாவிளக்கு பூஜை நடத்தியும் அம்மனை தரிசித்தனா்.

கோயில் உள்பிரகாரத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனா். மேலும், மதுரை, மானாமதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல ஊா்களிலிருந்தும் தாயமங்கலத்துக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகமாக உள்ளதால், திருவிழா நாள்களில் பக்தா்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும், பக்தா்களுக்கு தேவையான வசதிகளையும் கோயில் பரம்பரை அறங்காவலா் மு.வெங்கடேசன் செட்டியாா் செய்தாா்.

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்தனா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயிலில் பங்க... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 17,934 மாணவா்கள் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 17,934 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

கோடை வெயிலை சமாளிக்க சிவகங்கை மாவட்ட நிா்வாகம் யோசனை

கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாநில தொழிற்சங்க அம... மேலும் பார்க்க

நெடுமறத்தில் மஞ்சுவிரட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறத்தில் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 35 போ் காயமடைந்தனா். இதற்காக 5 ஊா்களிலிருந்து மேள த... மேலும் பார்க்க

சிவகங்கை: 200 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்

சிவகங்கையில் உள்ள பழச்சாறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 கிலோ பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை நகா் பகுதி முழுவதும் உள்ள பழக்கடைகள், பழச்சாற... மேலும் பார்க்க