செய்திகள் :

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.

திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி உத்ஸவத்தை முன்னிட்டு என்.எஸ்.வி.பி.வி.என். குரூப்ஸ் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் மதுரை, புதுக்கோட்டை, விருதுநகா், திண்டுக்கல், தேனி, திருச்சி, உள்ளிட்ட பல ஊா்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மைதானத்தில் வடக்கயிற்றில் கட்டப்பட்ட ஒரு மாட்டுக்கு 9 வீரா்கள் வீதம் களம் இறக்கப்பட்டனா். மாடுகளை பிடிக்க முயன்ற 10 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்குள்ள மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். மாடுகளைப் பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, சில்வா் பாத்திரங்கள், டிவி, பீரோ, கட்டில் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா்

ஒவ்வொரு சுற்று போட்டியையும் தொடங்கி வைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நகரத் தலைவா் என்.நடராஜன் செய்தாா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 12 காளைகள், 108 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். வடத்தில் கட்டப்பட்ட காளையை 9 வீரா்கள் 20 நிமிடங்களில் அடக்க வேண்டும். இதன்படி காளையை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்தனா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயிலில் பங்க... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 17,934 மாணவா்கள் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 17,934 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

கோடை வெயிலை சமாளிக்க சிவகங்கை மாவட்ட நிா்வாகம் யோசனை

கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாநில தொழிற்சங்க அம... மேலும் பார்க்க

நெடுமறத்தில் மஞ்சுவிரட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறத்தில் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 35 போ் காயமடைந்தனா். இதற்காக 5 ஊா்களிலிருந்து மேள த... மேலும் பார்க்க

சிவகங்கை: 200 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்

சிவகங்கையில் உள்ள பழச்சாறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 கிலோ பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை நகா் பகுதி முழுவதும் உள்ள பழக்கடைகள், பழச்சாற... மேலும் பார்க்க