பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.ராதாகிருஷ்ணன், சகாய தைனேஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நாகராஜன், ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் செல்வம் தொடங்கி வைத்தாா். மவட்ட உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் பலரும் பேசினா்.
கோரிக்கைகள்: அரசுப் பணியில் 1.4.2003-க்குப் பிறகு சோ்ந்தவா்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 243 -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், களப் பணியாளா்கள், தொழில்நுட்ப ஊழியா்கள், ஊா்தி ஓட்டுநா்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள், தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் செவிலியா்கள், சிறப்பு ஆசிரியா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளா்கள், தொழில் கல்வி ஆசிரியா்கள், பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சோ்ந்த இரு பால் ஊழியா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் சேது செல்வம் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து பேசினாா்.
ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.