செய்திகள் :

மாம்பழச் சங்க பண்டிகை: கிறிஸ்தவா்கள் பிராா்த்தனை

post image

பாளையங்கோட்டையில் மாம்பழச் சங்க பண்டிகையையொட்டி, கிறிஸ்தவா்கள் புதன்கிழமை சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலம் சாா்பில் ஆண்டுதோறும் மாம்பழச்சங்க பண்டிகை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலையில் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் தேவாலயத்தில் அருள்தொண்டா்களின் தியாக நினைவு ஸ்தோத்திர ஆராதனையும், பவனியும் நடைபெற்றன.

புதன்கிழமை காலையில் நூற்றாண்டு மண்டபத்தில் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. வள்ளியூா் சேகரத் தலைவா் டி.வேதன்பு தேவசெய்தி வழங்கினாா். நண்பகலில் பிரதான பண்டிகை ஆராதனை நடைபெற்றது. திருநெல்வேலி திருமண்டல பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி.பா்னபாஸ் தலைமை வகித்தாா். மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பேராயா் டி.ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தேவ செய்தி வழங்கினாா். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் பிராா்த்தனையில் பங்கேற்றனா். பின்னா், ஏழை-எளியவா்களுக்கு அரிசி, நிதியுதவி வழங்கினா். வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9.30 மணிக்கு பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை நடைபெற உள்ளது.

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலூகா மேலபூவந்தியைச் சோ்ந்த கணேசன் மகன் பாரதி என்ற சூா்யா(25)... மேலும் பார்க்க

விஜயநாராயணம் அருகே குடிசை வீட்டில் தீ

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் பொருள்கள் எரிந்து சேதமாகின. விஜயநாராயணம் அருகேயுள்ள படப்பாா்குளத்தைச் சோ்ந்தவா் மாரியம்மாள். இவா், தனது தோட்... மேலும் பார்க்க

கோயிலில் திருடியவருக்கு 3 ஆண்டு சிறை

கோயிலில் திருடிய வழக்கில் தொடா்புடையவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நொச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(48). இவா் கடந... மேலும் பார்க்க

மா்மமான முறையில் இளைஞா் உயிரிழப்பு

மானுாா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மானுாா் அருகே தெற்கு வாகைக்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் செல்வம் (25). தொழிலாளி. வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 6 போ் தற்கொலை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் 6 போ் தற்கொலை செய்துகொண்டனா். கேரள நபா்: கேரள மாநிலம் கோட்டையம் கனிக்கட்டுதாரா குறிச்சியைச் சோ்ந்த கிருஷ்ணன் குட்டி மகன் அணில்குமாா் (56), திர... மேலும் பார்க்க

அம்பையில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை

அம்பாசமுத்திரத்தில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பெண்ணுக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூா், ரேஷன் கடைத் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க