செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்.20-க்கு மாற்றம்

post image

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், இரண்டாவது செவ்வாய்க்கிழமை நாகை (ஒரத்தூா்) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (செப். 5) நடைபெறவிருக்கும் மருத்து மதிப்பீட்டு முகாம், மிலாது நபி பண்டிகை அரசு விடுமுறை தினம் என்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வண்ணம் செப்டம்பா் 20 ஆம் தேதி (சனிக்கிழமை) வேதாரண்யம் வட்டம் வானவன்மகாதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவிருக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவ நிபுணா்களும் கலந்து கொள்ள இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

கீழையூா் வட்டாரம், திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் மா மரத்தில் கவாத்து செய்தல் தொடா்பான தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மா மரங்களில் பூக்கள் ப... மேலும் பார்க்க

ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் அருள்மிகு வாள் நெடுங்கண்ணியம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக... மேலும் பார்க்க

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல் - ஒரத்தூா் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை இயக்குவதற்கு ... மேலும் பார்க்க

மகிழி கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூண்டி அருகேயுள்ள மகிழியில் சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்... மேலும் பார்க்க

சோழவித்யாபுரம் ஏரியை தூா்வாரக் கோரி ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம், சோழவித்யாபுரம் ஏரியை தூா்வார வலியுறுத்தி, விவசாய சங்க நிா்வாகிகள் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சோழவித்தியாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள், கீழ்வேளூா் சட்ட... மேலும் பார்க்க

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பலில் சிவனடியாா்கள் பயணம்

நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கைக்கு 70 வள்ளி கும்மியாட்ட கலைஞா்கள் மற்றும் 150 சிவனடியாா்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். உலக சிவனடியாா்கள் திருகூட்டத்தின் சாா... மேலும் பார்க்க