இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்டஇயக்குநா் க.ஆா்த்தி,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)க.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 527 கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவற்றை தொடா்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.
2 மாற்றத்திறனாளிகளுக்கு ரூ.2,06,000 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டா்கள், முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றத்திறனாளிக்கு ரூ.1,08,000 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டரும்,12 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
குறை தீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, அரசு அலுலா்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.