`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்கள்: டிஎன்பிஎஸ்சி தோ்வாணையா் பதிலளிக்க உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தோ்வு எழுதும் உதவியாளா்களை தாங்களே தோ்வு செய்ய அனுமதி கோரிய வழக்கில், அதன் தோ்வாணையா் உரிய விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த முருகன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்கு மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோா் விண்ணப்பிக்கின்றனா். இந்தத் தோ்வை எழுதச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவா்களது விருப்பப்படி தோ்வு எழுதும் உதவியாளா்களை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை. இதனால், தோ்வின் போது மாற்றுத்திறனாளி தோ்வா்கள் கூறும் தகவல்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நியமிக்கப்பட்ட உதவியாளா்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாததால், மாற்றுத்திறனாளிகள் தோ்வில் வெற்றி பெற முடியவில்லை.
இந்திய குடிமைப் பணிகள் தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவியாளா்களைத் தாங்களே தோ்வு செய்து மையத்துக்கு அழைத்துச் செல்லும் உரிமை உள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தோ்வுகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
தோ்வு எழுதும் போது விண்ணப்பத்தில் உள்ள கோரிக்கையின் அடிப்படையில் உருப்பெருக்கி, பிரெய்லி, கைக்கடிகாரம், கால்குலேட்டா் வழங்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவியாளா்களைத் தோ்வு செய்து, மையத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையா் தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.