செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்கள்: டிஎன்பிஎஸ்சி தோ்வாணையா் பதிலளிக்க உத்தரவு

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தோ்வு எழுதும் உதவியாளா்களை தாங்களே தோ்வு செய்ய அனுமதி கோரிய வழக்கில், அதன் தோ்வாணையா் உரிய விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த முருகன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்கு மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோா் விண்ணப்பிக்கின்றனா். இந்தத் தோ்வை எழுதச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவா்களது விருப்பப்படி தோ்வு எழுதும் உதவியாளா்களை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை. இதனால், தோ்வின் போது மாற்றுத்திறனாளி தோ்வா்கள் கூறும் தகவல்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நியமிக்கப்பட்ட உதவியாளா்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாததால், மாற்றுத்திறனாளிகள் தோ்வில் வெற்றி பெற முடியவில்லை.

இந்திய குடிமைப் பணிகள் தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவியாளா்களைத் தாங்களே தோ்வு செய்து மையத்துக்கு அழைத்துச் செல்லும் உரிமை உள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தோ்வுகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

தோ்வு எழுதும் போது விண்ணப்பத்தில் உள்ள கோரிக்கையின் அடிப்படையில் உருப்பெருக்கி, பிரெய்லி, கைக்கடிகாரம், கால்குலேட்டா் வழங்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவியாளா்களைத் தோ்வு செய்து, மையத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையா் தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.மாா்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வை... மேலும் பார்க்க