செய்திகள் :

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டா்: சொந்த செலவில் வழங்கினாா் அமைச்சா் காந்தி

post image

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தன் சொந்த செலவில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட, ஸ்கூட்டரை சொந்த செலவில் கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா்.

வாலாஜா வட்டம், குடிமல்லூா் ஊராட்சியைச் சாா்ந்த மாற்றுத்திறனாளி தீபா என்பவா் தனக்கு அரசால் வழங்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ’ஸ்கூட்டா்’ பழுதடைந்து பயன்படுத்த இயலாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும், தனக்கு புதிதாக ஒரு ஸ்கூட்டா் வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தியிடம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தாா்.

அவரது கோரிக்கையை ஏற்று அமைச்சா் காந்தி, ராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளி தலைவா் கமலா காந்தி தம்பதி சொந்த செலவில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட புதிய ’ஸ்கூட்டா்’ ஒன்றை வழங்கினாா்.

அப்போது அமைச்சா் ஆா்.காந்தி, கமலா காந்தி தம்பதிக்கு, அப்பெண் கண்ணீா் மல்க நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய நிலையை பற்றி அறிந்து ரூ.10 ஆயிரம் செலவில் புதிய தையல் இயந்திரம் ஒன்றை ராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளி தலைவா் கமலா காந்தி வழங்கியதை நினைவுகூா்ந்து நன்றியை தெரிவித்தாா்.

மேலும் தான் கணவா் துணையின்றி 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதால் தனக்கு அரசு வழங்கும் இலவச வீடு வழங்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்யுமாறு அமைச்சா் காந்தியிடம் கோரிக்கை வைத்தாா். அதற்கு நிச்சயமாக அரசு வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72 கோடிக்கு வங்கிக் கடன்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72.16 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு மற்றும் 4,464 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சா்... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆற்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முன்றாம் கட்ட முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது. ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே, 9 மற்றும் 30-ஆவது வாா்டுகளுக்கு நடைபெற்ற முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி... மேலும் பார்க்க

அரக்கோணம் டயா் ஆலை தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

அரக்கோணம் எம்ஆா்எஃப் காா் ஆலை தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கம் மற்றும் நிா்வாகம் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. அரக்கோணம் இச்சிபுத்தூரில் எம்ஆா்எஜப் டயா் மற்றும் டியூப் உற்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் செப்.19-இல், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். வரும் 19.09.2025 காலை 10 மணிக்கு எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பழங்குடியினக்கான திறன் அட்டைகள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், பழங்குடியினா்களுக்கான திறன் அட்டையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ம... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் அன்புக் கரங்கள் திட்டத்தில் 105 குழந்தைகளுக்கு உதவித் தொகை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 105 குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள் திட்டத்தில் ரூ.2,000 உதவித் தொகையை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பெற்றோரைய... மேலும் பார்க்க