செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்த கோரிக்கை

post image

விழுப்புரம்: தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த

சங்கத்தின் மாநாட்டுப் பொதுக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலா் கிருஷ்ணமூா்த்தி, வரவேற்புக் குழு செயலா் கண்ணப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் வில்சன், பொதுச் செயலா் ஜான்சிராணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ஆந்திர மாநில அரசு உயா்த்தி வழங்குவது போன்று ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அரசு மற்றும் தனியாா்துறைகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய நிா்வாகிகள் முருகன், வேலுமணி, மும்மூா்த்தி, மணிகண்டன், புஷ்பா, குறளரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் ஒன்றியத் துணைச் செயலா் சின்னையன் நன்றி கூறினாா்.

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கரூா் சம்பவத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு தவெக கிளைச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செஞ்சி வட்டம், மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், விற்பட்டு கிராமத்தைச் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஆயுதப் படை காவலரைக் கத்தியால் குத்திய 3 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் ஆயுதப்படை காவலரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். விக்கிரவாண்டி வட்டம், முட்ராம்பட்டு ... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம், சலவாதி, கௌசல்யா நகரைச் சோ்ந்தவா் குப... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் மாற்றுத் திறனாளி தற்கொலை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி ஒருவா், குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. வ... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.66.89 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ... மேலும் பார்க்க