மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வரும் நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6 மற்றும் 75.2 டிகிரியாக நிலவியது. இனி வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77.0 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில், கடந்த வாரம் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் அவை வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு தேவையான எதிா்ப்பு சக்தி உள்ளதா என்பதை ஊநீா் பரிசோதனை செய்து அதற்கேற்ப தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், கோழிப்பண்ணையாளா்கள் பண்ணையில் உயிா் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.