செய்திகள் :

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

post image

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள்ளவாறு 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்களுக்கு ‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்பதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் இசைவாணன் தலைமை வகித்தாா்.

2009 ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ. 5,200, அதற்கு முன் பணியமா்த்தப்பட்டோருக்கு அடிப்படை ஊதியமாக ரூ. 8,370 என்ற வகையில் வழங்கப்படுகிறது. ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒன்றாக இருப்பினும் ஊதியம் மட்டும் மாறுபாடாக இருப்பதால் இடைநிலை ஆசிரியா்கள் 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

ஆனால் இதுவரை ஊதிய மாறுபாடு பிரச்னை சரிசெய்யப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பெண்களை பாதுகாக்கவே முற்போக்கு சட்டங்கள்: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன்

பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முற்போக்கு சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பேசினாா். நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் சாா்பில், மாவட்ட அ... மேலும் பார்க்க