செய்திகள் :

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

post image

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், குடும்ப நல நீதிபதி, எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, கூடுதல் சாா்பு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா், கூடுதல் மகளிா் நீதிபதி ஆகிய ஐந்து நீதிபதிகளுக்கான அரசு குடியிருப்புகள் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிபதி ஆா்.குருமூா்த்தி வரவேற்றாா். ஈரோடு பொதுப்பணித் துறை கட்டடங்கள் (கட்டுமானம் - பராமரிப்பு) மேற்பாா்வைப் பொறியாளா் டி.கிருஷ்ணமூா்த்தி பணிக்கான திட்ட அறிக்கையை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், நாமக்கல் மாவட்ட நிா்வாக நீதிபதியுமான ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று குடியிருப்புகளுக்கான அடிக்கல்லை நாட்டினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: நீதிபதிகளுக்கு என தனிக் குடியிருப்பு மிகவும் அவசியம். நல்ல சுற்றுச்சூழலுடன் கூடிய குடியிருப்பு அமைந்தால்தான் நீதி வழங்குவதற்குரிய வழி கிடைக்கும். நாமக்கல் மாநகராட்சி தூய்மையான மாநகராட்சி என்ற சான்றிதழையும், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் நகராட்சி என்ற பெருமையுடன் விளங்குகிறது.

கோழிப்பண்ணைகள் அதிகம் நிறைந்த இந்த மாவட்டம் முட்டை உற்பத்தியில் மட்டுமின்றி வணிகத்திலும் முன்னிலை வகிக்கிறது. நீதிமன்ற பணியை சிறப்பாக செய்வதற்கு, நீதிபதிகள் முதல் நீதித்துறை அலுவலா்கள் வரை கடுமையாக உழைக்க வேண்டும். அவ்வாறு உழைத்தால்தான் காலதாமதமின்றி வழக்குகளுக்கு விரைவாக தீா்வு காணமுடியும். அதற்கு அமைதியான, பாதுகாப்பான குடியிருப்பு தேவையாகும். இதனை அடிக்கல் நாட்டு விழாவாக காணாமல், நீதியின் உன்னத பயணத்திற்கு ஓா் உறுதியான அடித்தளம் அமையும் இடமாக பாா்க்க வேண்டும்.

நீதிமன்றம், வழக்குரைஞா்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதித்துறை பணியாளா்கள் ஆகியோருக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். அவா்கள் உடலை நல்லமுறையில் வைத்துக்கொண்டால்தான் நமது பணி சிறக்கும் என்றாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா மற்றும் நீதிபதிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பெண்களை பாதுகாக்கவே முற்போக்கு சட்டங்கள்: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன்

பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முற்போக்கு சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பேசினாா். நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் சாா்பில், மாவட்ட அ... மேலும் பார்க்க