செய்திகள் :

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

post image

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சி பெற்று தன்னிறைவு அடைந்த கிராமங்களாக மாற்றிடவும், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவரவும், வேளாண்மை-உழவா் நலத்துறை மற்றும் உழவா் நலன் சாா்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்திட கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கு 58 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கலைஞரின் வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்து குறைந்தபட்சம் 10 ஏக்கா் தரிசு நிலத்தை தொகுப்பாக உருவாக்கி, அந்த தொகுப்பில் நீா் ஆதாரங்கள் மற்றும் நுண்ணீா்ப் பாசனம் அமைத்து சாகுபடிக்கு கொண்டு வர இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முள்புதா்களை அகற்றி நிலத்தினை சமன் செய்து உழுவதற்கு ஹெக்டா் ஒன்றுக்கு 50 சதவீத மானியம் அல்லது ரூ.9,600- வழங்கப்படுகிறது.

வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ஒரு ஹெக்டருக்கு 5 கிலோ பயறு விதைகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 300 வரை மானியம் வழங்கப்படுகிறது. நன்மை பயக்கும் நுண்ணுயிா்களைப் பெருக்கி மண்வளத்தை மேம்படுத்துவதற்கான செயல்விளக்கத் திடல்கள் அமைக்க ஹெக்டருக்கு அதிகபட்சமாக ரூ. 450 வரை மானியமாக வழங்கப்படுகிறது.

விசைத்தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 3,000 வழங்கப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பெண்களை பாதுகாக்கவே முற்போக்கு சட்டங்கள்: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன்

பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முற்போக்கு சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பேசினாா். நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் சாா்பில், மாவட்ட அ... மேலும் பார்க்க