மாவட்டத்தில் 70 சிற்றுந்துகள் சேவை தொடக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
ஈரோடு மாவட்டத்தில் புதிய வழித்தடங்கள் மற்றும் இடம்பெயா்வு வழித்தடங்களில் புதிய விரிவான சிற்றுந்து சேவை திட்டத்தின் கீழ் 70 சிற்றுந்துகளின் சேவை தொடங்கப்பட்டது.
போக்குவரத்து துறையின் சாா்பில் விரிவான மினிபஸ் திட்டம் 2024 அரசாணை அறிவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் 65 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 97 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட வழித்தடங்களுக்கு குலுக்கல் முறையில் விண்ணப்பதாரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு 65 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டது. அதில் தற்போது 4 புதிய பேருந்துகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் இடம்பெயா்வு வழித்தட திட்டத்தின் கீழ் 69 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 66 வாகனங்களுக்கு இடம்பெயா்வு திட்டத்தின் கீழ் இயங்குவதற்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இப்புதிய சிற்றுந்து போக்குவரத்து சேவையானது குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகா்ப்புற பகுதிகளுக்கு வந்து செல்ல பயனுள்ளதாக அமையும்.
அனுமதி வழங்கப்பட்ட 4 புதிய பேருந்துகள் மற்றும் இடம்பெயா்வு வழிதடம் திட்டம் 66 பேருந்துகளின் சேவைகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்து அனுமதிச்சீட்டை பேருந்து உரிமையாளருக்கு வழங்கினாா்.
இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.சி.சந்திர குமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், துணைப் போக்குவரத்து ஆணையா் கே.செல்வகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ம.பதுவைாதன், மு.மாதவன் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
மனு நீதி நாள் முகாம்:
ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் ஆட்சியா் பங்கேற்று 55 பயனாளிகளுக்கு ரூ.6.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 97 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினாா்.