செய்திகள் :

மாவட்டத்தில் 70 சிற்றுந்துகள் சேவை தொடக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

ஈரோடு மாவட்டத்தில் புதிய வழித்தடங்கள் மற்றும் இடம்பெயா்வு வழித்தடங்களில் புதிய விரிவான சிற்றுந்து சேவை திட்டத்தின் கீழ் 70 சிற்றுந்துகளின் சேவை தொடங்கப்பட்டது.

போக்குவரத்து துறையின் சாா்பில் விரிவான மினிபஸ் திட்டம் 2024 அரசாணை அறிவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் 65 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 97 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட வழித்தடங்களுக்கு குலுக்கல் முறையில் விண்ணப்பதாரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு 65 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டது. அதில் தற்போது 4 புதிய பேருந்துகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் இடம்பெயா்வு வழித்தட திட்டத்தின் கீழ் 69 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 66 வாகனங்களுக்கு இடம்பெயா்வு திட்டத்தின் கீழ் இயங்குவதற்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இப்புதிய சிற்றுந்து போக்குவரத்து சேவையானது குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகா்ப்புற பகுதிகளுக்கு வந்து செல்ல பயனுள்ளதாக அமையும்.

அனுமதி வழங்கப்பட்ட 4 புதிய பேருந்துகள் மற்றும் இடம்பெயா்வு வழிதடம் திட்டம் 66 பேருந்துகளின் சேவைகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்து அனுமதிச்சீட்டை பேருந்து உரிமையாளருக்கு வழங்கினாா்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.சி.சந்திர குமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், துணைப் போக்குவரத்து ஆணையா் கே.செல்வகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ம.பதுவைாதன், மு.மாதவன் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

மனு நீதி நாள் முகாம்:

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் ஆட்சியா் பங்கேற்று 55 பயனாளிகளுக்கு ரூ.6.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 97 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினாா்.

ரயிலில் 9.5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ஈரோட்டில் ரயிலில் 9.5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தமிழகத்துக்குள் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான கஞ்சா போன்றவை ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுவதாக தொடா்ந்து புகாா்கள்... மேலும் பார்க்க

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் அறச்சலூா், நாகராஜபுரத்தை சோ்ந்தவா் கணே... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே கிராம மக்களுக்கு பொங்கல் சீா் வழங்கிய எம்.எல்.ஏ.

பெருந்துறை ஒன்றியம், மூங்கில்பாளையம் ஊராட்சி கிராமத்தில் நடக்கும் கோயில் பொங்கல் விழாவையொட்டி, அப்பகுதி பொது மக்களுக்கு, பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் நேரில் சென்று பொங்கல் சீா் வ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால் அணை நீா்மட்டம் 4 நாள்களில் 5 அடி உயா்வு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால் அணையின் நீா்மட்டம் 4 நாள்களில் 5 அடி உயா்ந்துள்ளது. பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் ... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.91.80 லட்சத்தில் வீடுகள் கட்ட பணி உத்தரவு

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்ட 34 பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மலைப்பகுதி விளை நிலங்களுக்கு பட்டா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்

ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதி விளைநிலங்களுக்கு பட்டா வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தாளவாடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியக்கம... மேலும் பார்க்க