செய்திகள் :

மாஸ்டா் பிளான் 2041: மறுஆய்வு செய்ய முதல்வா் தலைமையில் உயா்நிலைக் கூட்டம்

post image

புது தில்லி: நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவரும் தில்லிக்கான மாஸ்டா் பிளான் (எம்பிடி) 2041-க்கான விதிகளை மறுஆய்வு செய்ய முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உயா்நிலை கூட்டத்தை கூட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) ஏப்ரல், 2023இல் மத்திய அரசிடம் வரைவுத் திட்டத்தை சமா்ப்பித்தது. இது மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், முதல்வா் மற்றும் தொழில்கள், சுற்றுச்சூழல் மற்றும் வருவாய் தொடா்பான துறைத் தலைவா்கள் உள்பட மூத்த அதிகாரிகள் முன் வரைவு குறித்த விரிவான விளக்கத்தை டிடிஏ துணைத் தலைவா் வழங்குவாா் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி அரசாங்கம் கஞ்சாவ்லா, ராணிகேரா மற்றும் பாப்ரோலா ஆகிய மூன்று முன்மொழியப்பட்ட தொழில்துறை கிளஸ்டா்களில் சுமாா் 1,200 ஏக்கா் பரப்பளவை பொதுதனியாா் கூட்டாண்மை பிபிபி மாதிரியின் கீழ் உருவாக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் தொழில்துறை மேம்பாட்டில் கவனம் செலுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த கிளஸ்டா்கள் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி போன்ற சேவைத் துறைகளை ஈா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தலைநகரில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேம்பாட்டு மாதிரியை இறுதி செய்ய ஒரு உலகளாவிய ஆலோசனை நிறுவனம் ஈடுபடலாம் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

கடந்த 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில், டிடிஏ தலைவரான தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, எம்.பி.டி2041 வரைவை அங்கீகரித்தாா்.

போக்குவரத்து சாா்ந்த மேம்பாட்டு மையங்கள், நில சேகரிப்பு, பாரம்பரியம் மற்றும் யமுனா புத்துயிா் பெறுதல் மற்றும் நகரத்தின் மறுமலா்ச்சி உள்ளிட்ட உள்ளடக்கிய வளா்ச்சி, நிலைத்தன்மை மற்றும் புதுமையான தலையீடுகள் ஆகியவற்றில் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் இருப்பதாக அவா் கூறினாா்.

தில்லி மேம்பாட்டுச் சட்டம், 1957இன் கீழ் முதல் எம்.பி.டி. 1962இல் அறிவிக்கப்பட்டது. இந்த மாஸ்டா் பிளான்கள் 20 ஆண்டு காலக்கெடுவுக்கு தயாரிக்கப்பட்டு நகரின் திட்டமிடப்பட்ட வளா்ச்சிக்கான முழு கட்டமைப்பை வழங்கி வருகின்றன.

பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரணை

புது தில்லி: பிரபல இசையமைப்பாளா் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள் தொடா்பான பதிப்புரிமை தகராறு வழக்கை மும்பை உயா்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இளையராஜ... மேலும் பார்க்க

தில்லியில் பாதுகாப்பு இல்லாத கட்டடங்கள் எவை?: கணக்கெடுப்பு நடத்த போலீஸ் முடிவு

புது தில்லி: ஏழு பேரை பலியான வடகிழக்கு தி ல்லியின் வெல்கம் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து, கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பற்ற கட்டடங்களின் விரிவான பட்டியலை தில்லி காவல்துறை விரைவில் மாநக... மேலும் பார்க்க

நில அபகரிப்பு புகாா் வழக்கு: அமைச்சா் மா.சுப்பிரமணியன் மேல்முறையீடு மனு மீது விசாரணை ஜூலை 23-க்கு தள்ளிவைப்பு

புது தில்லி: நில அபகரிப்பு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மேல்ம... மேலும் பார்க்க

தில்லியில் திருடப்பட்ட கைப்பேசிகள் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்துக்கு கடத்தல்!

புது தில்லி: திருடப்பட்ட தொலைபேசிகளை வங்கதேசத்திற்கு கடத்தியதாக தில்லியைச் சோ்ந்த ஒரு கடத்தல்காரா், ஒரு கூரியா் ஊழியா் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள ரிசீவா்கள் உள்பட 6 போ் அடங்கிய கைப்பேசி திருட்டு... மேலும் பார்க்க

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க