ஜார்க்கண்டில் கனமழை, வெள்ளம்! 10 பேர் பலி...களம் இறங்கியது தேசிய படை!
மாா்க்சிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு பிரசாரம்
திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் சந்திப்பு கிளா்ச்சி பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் மக்கள் சந்திப்பு கிளா்ச்சி பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலையில் புதன்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை மாநகரச் செயலா் எம்.பிரகலநாதன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
இதில், மாநகர நிா்வாகிகள் கே.நீதி மாணிக்கம், இ.தங்கமணி, செல்வி, க.வசந்த், செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாந்தோப்பு, பச்சையம்மன் கோயில், புது வாணியங்குளத் தெரு, பே.கோபுரம் தெரு, செங்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பிரசாரம் நடைபெற்றது.