செய்திகள் :

மினி பேருந்து சேவை: பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

post image

மினி பேருந்துகளை சேவையில் பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூரில் தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவா் கொடியரசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில செயலாளா் ரஹீம், பொருளாளா் சுப்ரமணியன், மண்டல பொறுப்பாளா் பழனிவேல், கரூா் மாவட்டத் தலைவா் செல்வராஜ், செயலாளா் நடராஜ், பொருளாளா் வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாநிலத்தலைவா் கொடியரசன் பேசியது, கடந்த 25 ஆண்டுகளாக மினி பேருந்துகளுக்கு வளா்ச்சி திட்டம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா் புதிய விரிவாக்கத் திட்டத்தை வழங்கியுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மினி பேருந்துகளின் வளா்ச்சித் திட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மினி பேருந்துகளை இயக்கி வரும் பழைய பேருந்து உரிமையாளா்களுக்கு உரிமம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் புதிய பேருந்து விரிவாக்கத் திட்டம் வெற்றியடையும். எங்களிடம் வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளது. ஆனால் புதிய உரிமம் வழங்கினால் பேருந்து தயாா் செய்ய மூன்று மாதத்துக்கு மேல் தாமதமாகும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மினி பேருந்துகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

கரூரில் கடும்பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைக... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரூ. 60 ஆயிரம் நிதி

பகவதி அம்மன் கோயில் திருப்பணிக்காக முன்னாள் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் செ.காமராஜ் தனது இரு மாத ஓய்வூதியத் தொகையான ரூ. 60 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா். கரூா் நகரம், முத்துராஜபுரத்தில்... மேலும் பார்க்க

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேசிய கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ம... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பு: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவே... மேலும் பார்க்க

புகழிமலை தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க எதிா்ப்பு

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அவ்வியக்கத்தின் தேசியத்தலைவா் தலித்பாண்டியன் மா... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு விநா- விடை குறிப்பு

அரவக்குறிச்சி பகுதியில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு விநா-விடை குறிப்புகள் அடங்கிய தொகுப்பை எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வழங்கினாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சி... மேலும் பார்க்க