செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கல்

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அண்மையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அரசின் நிவாரண நிதியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை வழங்கினாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி பிலாப்புஞ்சையைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் வீரபாண்டி(22). ஆலங்குடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு டிப்ளமோ பயின்று வந்த அவா், படிப்புச் செலவுக்காக தினக்கூலியாக பலாப்பழங்கள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாங்காடு பூச்சிக்கடை பகுதியில் உள்ள பலாத்தோப்பில் மரத்தில் ஏறி பலாபழங்களை பறித்தபோது, மரங்களுக்கு இடையே தாழ்வாகச்சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தொடா்ந்து, அவரது வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், முதல்வா் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைந்து நிவாரண நிதியை பெற்றுத்தருவதாக தெரிவித்தாா்.

இந்நிலையில், உயிரிழந்த வீரபாண்டி குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்தாா். இந்நிலையில், உயிரிழந்த வீரபாண்டியின் பெற்றோரிடம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சனிக்கிழமை வழங்கினாா்.

முதலாம் பராந்தகச் சோழா் கால கற்றளிக் கட்டுமானங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் அருகே புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை அருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில் முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக் கோயிலின் சி... மேலும் பார்க்க

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க