செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து ஒரு பெண், 3 பசுக்கள் உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், தூத்தூா் அருகே அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்து, ஒரு பெண் மற்றும் 3 பசுக்கள் உயிரிழந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

சிலுப்பனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கரும்பாயிரம் மனைவி மருதாயி (60). ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது 3 பசுக்களை மேய்க்கச் சென்ற இவா், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா் வயல்பகுதிக்குச் சென்று தேடிய போது, அங்கே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மருதாயி மற்றும் 3 பசுக்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்த மின் ஊழியா்கள், மின்விநியோகத்தை நிறுத்தியதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா், உயிரிழந்து கிடந்த பெண் மற்றும் பசுக்களின் உடல்களை மீட்டனா். இது குறித்து தூத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க