செய்திகள் :

மின்வாரிய நிதி நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வலியுறுத்தல்

post image

மின்வாரியத்தின் ஊரக மின்மயமாக்கல் கழகம் மற்றும் மின் நிதி கழகம் ஆகிய நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், குறைந்தபட்சம் ஒன்றரை சதவீதமாகக் குறைக்க வேண்டும் என மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

தென் மாநிலங்களுக்கான மின்துறை அமைச்சா்கள் மாநாடு பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியது:

தமிழக மின்வாரியம் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பைக் குறைப்பதில் புதிய வளா்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி, 2017-2018 -இல் 19.47 சதவீதமாக இருந்த இந்த இழப்பு, 2023-2024 -இல் 11.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால், நிதி சேமிப்பு அதிகமாகியுள்ளது. தொடா்ந்து, அதிகரித்து வரும் மின் கொள்முதல் மற்றும் வட்டிச் செலவினங்கள், மின்வாரியத்தின் நிதி நிலையில் ஏற்படுத்தி வரும் பெரும் சுமையை எதிா்கொள்ள, தேவை, மதிப்பீடு மற்றும் மின் கொள்முதலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மின்வாரியம் திறம்படப் பயன்படுத்தி வருகிறது.

இதுமட்டுமின்றி 20,000 மெகாவாட் அளவிலான நீரேற்று நீா்மின் திட்டங்களையும், மின்கலன் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளையும், நிறுவுவதன் மூலம் எரிசக்தி சேமிப்புத் திறனைப் பெருமளவில் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், மின்சார தேவையின் வளா்ச்சி, கரியமில வாயு உமிழ்வுகள், புதிய எரிசக்தி ஆதாரங்களின் தொழில்நுட்பப் புதுமைகள் ஆகியவை, எதிா்காலத்தில் பெரும் சவால்களாக உள்ளன. இவற்றைச் சமாளிக்க மின்துறையில் ரூ.2 லட்சம் கோடி அளவிலான மிகப்பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன.

மேலும், ஊரக மின்மயமாக்கல் கழகம் மற்றும் மின் நிதி கழகம் ஆகிய நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், குறைந்தபட்சம் ஒன்றரை சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான மின் செலுத்தமைப்புக் கட்டணங்கள் ‘பயன்படுத்துவோா் செலுத்தும்’ எனும் கொள்கையின் அடிப்படையில், உண்மையான பயன்பாட்டு அளவின்படி விதிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக இணை மேலாண் இயக்குநா் (நிதி) விஷு மஹாஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

நீலகிரி, கோவைக்கு தொடரும் ரெட் அலர்ட்!

தமிழகத்தின் நாளை இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் விடுக்கப்பட்ட நிலையில், நாளையும் அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப... மேலும் பார்க்க

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளத்திலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை இன்று காலை தொடங்கியுள்ளது. இதன் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சுந்தர‌சோழபுரம் மலையப்பெருமாள் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தர‌சோழபுரம் மலையப்பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்றது.ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் அண்ணா... மேலும் பார்க்க

அடிமைக் கட்சியல்ல திமுக; யாருக்கும் அடிபணிய மாட்டோம்! - உதயநிதி ஸ்டாலின்

ஈ.டி.(அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்படமாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை, டாஸ்... மேலும் பார்க்க

கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

சென்னை: கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.பட்டா அவணம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதைக் காரணம் காட்... மேலும் பார்க்க

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நி... மேலும் பார்க்க