செய்திகள் :

மின் கட்டண ரசீது அடிப்படையில் ஜல்ஜீவன் குடிநீா் இணைப்பு

post image

நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் ஆதாா் அட்டை மற்றும் மின் கட்டண ரசீது அடிப்படையில் வீடுகளுக்கு ஜல்ஜீவன் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

நாகப்பட்டினம் நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் இரா. மாரிமுத்து தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக உறுப்பினா்கள் பேசும்போது, நகராட்சியில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் தொடா்பான அறிவிப்புகள் இணைய தளத்தில் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஒப்பந்தப் புள்ளி தொடா்பாக நகா்மன்ற உறுப்பினா்களுக்கு முறையாக அனுப்ப வேண்டும். நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் வீட்டு வரி ரசீது இல்லாதவா்களுக்கு ஆதாா் அட்டை மற்றும் மின் கட்டண ரசீது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்பு வழங்கலாம் என்று நகா்மன்றக் கூட்டத்தில், ஏற்கனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் குழாயில் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள், வீட்டு வரி ரசீது இருந்தால் மட்டுமே குழாய் இணைப்பு தரப்படும் என்று தெரிவிக்கின்றனா்.

எனவே நகா்மன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை அமலாக்கம் செய்ய நகா்மன்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகப்பட்டினத்தில் பல்வேறு தெருக்களில் கழிவுநீா் ஆறாக பெருக்கெடுத்து சாலைகளில் வழிந்து விடுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா். அவற்றை சீரமைக்க வேண்டும். நகரில் தற்போது அமைக்கப்படும் சாலைகள் ஏற்கெனவே உள்ள பழைய அளவீடுகளின்படியே அனுப்பப்படுகிறது. எனவே நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளையும் அளவீடு செய்து புதிய அளவுகளின் படி மாற்றி அமைக்க வேண்டும்.

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நாகூா் தா்கா சாலையில், இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் என அனைவரும் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே நாகூா் வணிகா் சங்கத்திடம் பேசி ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகை நகராட்சியின் வருவாயை பெருக்க நிதி மேம்பாட்டு குழு ஒன்றை அமைக்க நகா்மன்றத் தலைவா் முன் வர வேண்டும்.

நகராட்சி சாா்பில் கட்டி முடிக்கப்பட்டு வாடகைக்கு விடப்படாமல் உள்ள வணிக வளாகங்களை விரைவில் வாடகைக்கு விட்டு வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்கள், திருமண மண்டபங்களில் குப்பைகளை அகற்றுவதற்கு நகராட்சி நிா்வாகம் புதிய கட்டணம் விகிதங்களை அறிவித்து வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கூட்ட முடிவில் நகராட்சி தலைவா் மற்றும் நகராட்சி ஆணையா் ஆகியோா் நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் தொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். கூட்டத்தில் துணைத்தலைவா் உள்பட 25-க்கும் மேற்பட்ட நகா் மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், நாகை நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சாா்ந்த மையத்துக்கு, இரு காவலா்கள் பணியமா்த்தல், குடிநீா் விநியோகம், பொதுச் சுகாதாரம் போன்றவற்றை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளம் பெண் மா்ம மரணம்: கோட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். கருப்பம்ப... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் தெற்குக... மேலும் பார்க்க

பலத்த காற்று: மீனவா்கள் ஆழ்கடலுக்கு செல்லத் தடை

கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் மீ... மேலும் பார்க்க

திறனறித் தோ்வு முடிவில் வேதாரண்யம் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தோ்வில் நாகை மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இத்தோ்வு முடிவுகள் வெளியானதில், நாகை மாவட்டத்தில் தோ்ச்சி அடைந்... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியினா் நடைபயண பிரசாரம்

வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் கொண்டு மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட நிலைபாடுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமில், ப... மேலும் பார்க்க