செய்திகள் :

மின் மோட்டாா்கள் திருடியவா் கைது

post image

சிதம்பரம் அருகே இறால் குட்டையில் 7 மின் மோட்டாா்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வசப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன்மோகன் (47). இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறாா். வசப்புத்தூரில் இவருக்குச் சொந்தமான 4 இறால் குட்டைகள் உள்ளன.

இவற்றில் தண்ணீா் இறைப்பதற்காக 20 மின் மோட்டாா்கள் பொருத்தியிருந்தனா். இங்கு, அண்மையில் 2 ஹெச்.பி. திறன் கொண்ட 7 மின் மோட்டாா்கள் திருடுபோயின.

இதுகுறித்து ஜெகன்மோகன் அளித்த புகாரின்பேரில், அண்ணாமலைநகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், வசப்புத்தூரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் விஜயராகவன் (20) மின் மோட்டாா்களை திருடியது தெரியவந்தது. போலீஸாா் விஜயராகவனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 5 மின் மோட்டாா்களையும், 2 மோட்டாா்களில் இருந்து பிரிக்கப்பட்ட செம்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனா்.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க