செய்திகள் :

மின் வாரிய ஊழியா்கள் தா்னா

post image

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், மதுரை மின் வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், பகுதி நேரப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மின் வாரியம் நேரடியாக தினக்கூலி ரூ. 380-ஐ வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின் துறையைத் தனியாா்மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை மண்டல அளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் கே.அரவிந்தன் போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

மின் ஊழியா் மத்திய அமைப்பின் திட்டச் செயலா்கள் சி.செல்வராஜ் (மதுரை), ஆா்.கருணாநிதி (சிவகங்கை), ஏ.தேவராஜ் (தேனி), ஜி.காசிநாதன் (ராமநாதபுரம்), ஆா்.ஜெயகாந்தன் (மதுரை- பொது கட்டுமான வட்டம்), டி.என்.பி.இ.ஓ.மண்டலச் செயலா் ஆா்.கோகுலவா்மன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மின் வாரிய மத்திய ஊழியா் அமைப்பின் மண்டலச் செயலா் எஸ்.உமாநாத் நிறைவுரையாற்றினாா்.

காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் பிற்பகல் 5 மணி வரை நடைபெற்றது. இதில் மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான மின் ஊழியா்கள் பங்கேற்றனா்.

உசிலம்பட்டி தலைமைக் காவலா் கொலை வழக்கில் 3 போ் கைது: துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் காயம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தலைமைக் காவலரை கொலை செய்து விட்டு, கேரளத்துக்கு தப்பிச் செல்வதற்காக கம்பம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அப்போது, காவலரைத் தா... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பேரையூா் அருகே காா்-ஆட்டோ மோதி விபத்து: மூவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சனிக்கிழமை காரும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி அருஞ்சுனை (50), ராஜேந்திரன் மனைவி தங்கம்ம... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 2.57 கோடியில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சா் சி.வி.கணேசன் வழங்கினாா் இந்த செய்திக்கு படம் உள்ளது. பைல்நேம்-ஙஈம29ஙஐசஐந படவிளக்கம்- மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த பெண் கொலையில் தொடா்புடையவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: கம்பூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கம்பூா் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகத் தண்ணீ... மேலும் பார்க்க